ஒடிசா: தேரிலிருந்து சிலைகளை கோயிலுக்கு மாற்றும் போது நேர்ந்த விபரீதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசா மாநிலம் பூரியில் பாலபத்ரரின் சிலை தவறி விழுந்ததில் 7 பணியாளர்கள் காயமடைந்தனர். ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகன்நாதர் ரத யாத்திரை முடிந்ததையொட்டி மூன்று சிலைகளையும் தேரிலிருந்து கோவிலுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. அப்போது பாலபத்ரரின் சிலை தேரிலிருந்து குண்டிச்சா கோவில் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது, தவறி விழுந்ததில் 7 பணியாளர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Night
Day