ஒன்றைரை மாதம் நடைபெற்ற ஜனநாயக திருவிழா நிறைவு - ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

7-வது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

6 கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலும் நடைபெற்று முடிந்தது.  நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் அமைதியான முறையில் வக்களித்தனர். பீகாரில் 8, சண்டிகர் 1, இமாச்சலப் பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, ஒடிசா 6, பஞ்சாப் 13, உத்தரப் பிரதேசம் 13, மேற்கு வங்கத்தில் 9 என மொத்தம் 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இதன் மூலம் கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Night
Day