ஒய்.எஸ்.ஆர்.காங். அலுவலகத்தை இடித்து தள்ளிய சந்திரபாபு நாயுடு அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போன்று செயல்படுவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள தடேபள்ளியில் கட்டப்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பழிவாங்கும் அரசியலை சந்திரபாபு நாயுடு அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர் சர்வாதிகாரியாக மாறி தங்களது கட்சி அலுவலகத்தை இடித்துவிட்டதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். 

Night
Day