ஒரு பிரிவு மக்களின் ஆதார் முடக்கம் - பிரதமருக்கு, மம்தா கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட சில பிரிவு மக்களின் ஆதாா் அட்டைகள் முடக்கப்பட்ட விவகாரம் இயற்கை நீதி மற்றும் நடைமுறைகளுக்கு எதிரானது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் டெல்லியிலுள்ள ஆதாா் ஆணையம் நேரடியாக தனி நபா்களுக்கு கடிதம் மூலம் ஆதாா் அட்டை முடக்கப்பட்டுள்ள தகவலை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆதாா் அட்டைகள் முடக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய விரும்புவதாகவும் இந்த நடவடிக்கை, பயனாளிகளின் சலுகைளைப் பறிக்கவா? அல்லது, மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக மக்களிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Night
Day