ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து ம.பி அரசு கின்னஸ் சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

24 மணி நேரத்தில் அதிகபட்ச மரங்களை நட்டு மத்திய பிரதேச அரசு உலக சாதனை படைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து அம்மாநில அரசு உலக சாதனையில் இடம் பெற்றது. இந்த கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் பெற்றார். மத்தியப் பிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தலைமையிலான இந்த முயற்சி, அஸ்ஸாமின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

Night
Day