ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் மரணம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சந்தேகமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரில் உள்ள ஜெக் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஷ் மாதவி தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட அவர்களது 25 வயது மகன் ஹரியும் அவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் 3 பேரும் நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரும் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான அடையாளங்கள் இல்லாததால் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Night
Day