ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிராஜ்பூர் மாவட்டம் சோண்ட்வா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராகேஷ், அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகிய ஐவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day