ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிடுக

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட உயா்நிலைக் குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இக்குழுவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு போதிய பிரநிதித்துவம் இல்லாதது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். இது உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளால் அந்த மாநில அரசுகள் பாதிப்படைய வழிவகுக்கக் கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தோ்தல்களை நடத்துவதற்கான செலவினம் மிக அதிகமாக இருப்பதாக கூறப்படும் வாதம் அடிப்படை ஆதாரமற்றது என்றும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தோ்தல்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day