ஒரே விமானத்தில் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மாமா என அழைத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அருகே அமர்ந்து தேஜஸ்வி யாதவ் பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாரதிய ஜனதா கட்சிக்கு தனி பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும்  தேஜஸ்வி யாதவ் இருவரும் ஒரே விமானத்தில் பாட்னாவில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்படுவதற்கு முன்பு வரை தனித்தனி வரிசை இருக்கைகளில் அமர்ந்திருந்த நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரே வரிசை இருக்கையில் அமர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை மாமா என அழைத்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

Night
Day