ஓடும் மின்சார ரயிலில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் ; இளைஞரைத் தேடி வரும் RPF

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் உள்ள செவ்ரி ரயில் நிலையத்தில் ஓடும் மின்சார ரயிலில் ஒரு இளைஞர் ஆபத்தான வகையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தனிநபர் மற்றும் பிற பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற பாதுகாப்பற்ற நடைமுறைகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு ரயில்வேத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Night
Day