ஓராண்டுக்குப் பின் பிரதமர்-மணிப்பூர் முதலமைச்சர் சந்திப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி இன்னும் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பிரதமரை நேற்று நேரில் சந்தித்தார். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மிகப் பெரிய இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் நிலைமை குறித்து இருவரும் விவாதித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக நேற்று மணிப்பூர் ஆளுநர் அனுசியா உய்கே நீக்கப்பட்டு, அசாம் மாநில புதிய ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவுக்கு மணிப்பூரின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day