கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.352 கோடி வருவாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகள் மூலம் 352 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரே மாதிரியான சுங்க கட்டணத்தை வசூலிப்பதாகவும், நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை என தனிப்பட்ட சுங்க கட்டணங்களை மத்திய அரசு வசூலிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும் கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகள் மூலம் 352 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Night
Day