கணவர் அமிதாப் பெயரை குறிப்பிட எதிர்ப்பு தெரிவித்த ஜெயா பச்சன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தனது கணவர் பெயரான அமிதாப்பை, ஜெயா பச்சன் மீண்டும் உச்சரித்ததால் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் குலுங்கி குலுங்கி சிரித்தார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மாநிலங்களவையில் எம்.பி. ஜெயா பச்சனை பேச அழைக்கும்போது ஜெயா அமிதாப் பச்சன் என அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கடந்த சில நாள்களுக்கு முன்பு குறிப்பிட்டார். இதனால் சற்றே கோபமான ஜெயா பச்சன், தன் பெயரை ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும். கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதிதாக உள்ளது என்றும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய மாநிலங்களவை கூட்டத்தில் மீண்டும் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைத்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய ஜெயா பச்சனும், சிரித்து கொண்டே அமிதாப் பெயரை உச்சரித்தது காண்போரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.

Night
Day