கத்தார் அதிபரை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா வந்துள்ள கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவரை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ள கத்தார் அதிபர், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். 

Night
Day