கத்தார் சிறையில் சிக்கித்தவித்த 8 இந்தியர்கள் விடுதலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கத்தாரில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் 18 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டிய கத்தார் அரசு, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. இதுதொடர்பாக இந்தியா பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்களது மரண தண்டனை ஜெயில் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் கத்தார் அரசு 8 பேரையும் விடுவித்தது. இதில் 7 பேர் இந்தியா வந்தடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

Night
Day