கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்: 3 பேர் பரிதாப பலி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கன மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் பலியாகின. அங்குள்ள தாத்ரி பகுதியில் கோத்னா கலான் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீட்டின் சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 8 குழந்தைகளில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Night
Day