கனமழை காரணமாக பழமையான வீட்டின் கூரை இடிந்து விபத்து!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

கனமழை காரணமாக ஹரித்வார் அருகே உள்ள போரிதோரா பகுதியில் பழமையான வீட்டின் கூரை நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதில், 11 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக அதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 9 பேரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Night
Day