கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது. 2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. அதன், முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியான நிலையில், தேர்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட ஆயிரத்து 563 பேருக்கு அந்த மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு கடந்த 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மறுத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் மறு தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Night
Day