கருப்பு பணம் மீண்டும் வந்துவிடும் என அஞ்சுகிறேன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், மீண்டும் இந்தியாவில் கருப்பு பணம் வந்து விடும் என அஞ்சுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், மீண்டும் இந்தியாவில் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட, அதை மேம்படுத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day