கர்நாடகத்தில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலத்தில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தையை ஏராளமான மக்‍கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். கர்நாடக மாநிலம் பாகல்கோட் ரப்கவி நகரில் வசிப்பவர் குரப்பா. இவரது மனைவி பாரதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்துக்காக ரப்கவி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏன் என்றால் குழந்தைக்கு 25 விரல்கள் இருந்தன. வலது கையில் ஆறு, இடது கையில் ஏழு விரல்கள், இரண்டு கால்களிலும் தலா ஆறு விரல்கள் இருந்தன. குரோமோசோம்கள் காரணமாக இதுபோன்ற குழந்தை பிறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்.

varient
Night
Day