கர்நாடகம் : மைசூருவில் விளைநிலத்தில் பாய்ந்த வெள்ளம் - விவசாயிகள் வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு கர்நாடகாவில் பெய்த கனமழையால் மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்கப்பட்டது.

பெங்களூரு, ராமநகரா, தும்கூரு, மைசூரி மற்றும் சிக்‍கபல்லாபூர் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. அங்குள்ள ஹனகோடு பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் நீரில் மூழ்கின. ஆயிரக்‍கணக்‍கான ஏக்‍கர் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டது. ராமநகரா புறநகர் பகுதியிலும், பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையிலும் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. சாம்ராஜ்நகர், குண்டல்பேட் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

Night
Day