கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரும் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் நிர்வாக ரீதியிலான பணியிடங்களில் 50 சதவீதத்தை கன்னடர்களுக்கு வழங்கவும், இதர பணிகளில் 70 சதவீதம் பேரை பணியமர்த்தவும் வகை செய்யும் மசோதா தயார் ஆகியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கன்னட நிலத்தில் கன்னடர்கள் வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டுமென்பதே தனது அரசின் விருப்பம் என குறிப்பிட்டுள்ளார். இந்த இட ஒதுக்கீடு மசோதா கர்நாடக சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day