கர்நாடகாவில் மனித கழிவுகளை அகற்ற துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்த தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலத்தில் பாதாளச் சாக்‍கடைகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா எச்சரித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகாவில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை விதிக்‍கப்பட்டு இருப்பதை சுட்டிக்‍காட்டினார். இதனை மீறி மாநிலத்தில் பாதாளச்சாக்‍கடைகளில் துப்புரவு தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்று எச்சரித்தார்.

Night
Day