கர்நாடகா : முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் உதவிகேட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்த நிலையில், சதாசிவநகர் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Night
Day