கர்நாடகா: அறுவை சிகிச்சையின்போது அடுத்தடுத்து உயிரிழந்த 3 பெண்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது 3 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவர் உட்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தும்கூர் மாவட்டம் பாவகடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனிதா, அஞ்சலி, நரசம்மா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், ஒப்பந்த மகப்பேறு மருத்துவர் பூஜா, செவிலியர் பத்மாவதி, ஊழியர் கிரண் ஆகியோரை பணிநீக்கம் செய்தனர். 

Night
Day