கர்நாடகா: ஜேசிபி வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்த்து ஜேசிபி வாகனத்துக்கு தந்தையும் மகனும் சேர்ந்து தீ வைத்ததால் பரபரப்பு நிலவியது. சிவகோட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பச்ச கவுடா என்பவரும் அவரது மகன் சேத்தனும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஜேசிபி வாகனத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். சரியான நேரத்தில் வெளியே குதித்ததால் ஜேசிபி ஓட்டுநர் உயிர் தப்பினார். இதையடுத்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர்.

Night
Day