கர்நாடகா: விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலம் ஹவேரியில் சிவப்பு மிளகாய் விலை சரிவை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஹவேரி மாவட்டத்தில் உள்ள பியாடாகி மொத்த விற்பனை சந்தையில், சிவப்பு மிளகாய் விலை திடீரென 10 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில், விவசாயிகள் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்பி அனுஷ்குமார், போராட்டம் சம்மந்தமாக சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். 

Night
Day