கள்ளநோட்டுக்களை தயாரித்த 4 பேர் கொண்ட கும்பல் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத்தில் பணத்தாளில் காந்திக்கு பதில் நடிகர் அனுபம் கெர் புகைப்படத்தை அச்சடித்து கள்ளநோட்டுகள் தயாரித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வித்தியாசமான முறையில் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகள் தயாரித்த கும்பல் சிக்கியுள்ளது. சாகித் கபூர், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்சி வெப் சீரிஸை பார்த்து, அதில் வருவது போல் கள்ளநோட்டுகளை தயாரித்து ஏமாற்ற முயன்றுள்ளனர். மகாத்மா காந்திக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கெர் புகைப்படத்துடன் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை அச்சடித்த கும்பல், நோட்டுகளில் ரிசர்வ் பேங் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக ரிசோல் பேங் ஆப் இந்தியா என்றும், ஸ்டேட் பேங் ஆப் இந்தியா என்றும் அச்சிட்டுள்ளனர். 

Night
Day