காங்கிரஸ் ஆட்சியில் ஜாதி அடிப்படையிலான மக்‍கள் தொகை கணக்‍கெடுப்பு நடத்தப்படும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்‍கீடு 50 சதவீதத்தை தாண்டக்‍கூடாது என்ற உச்சவரம்பு, மத்தியில் காங்கிரஸ், ஆட்சிக்‍கு வந்தால், நீக்‍கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ஜாதி அடிப்படையிலான மக்‍கள் தொகை கணக்‍கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது நீதி யாத்திரையின்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தலித் மக்‍கள், பழங்குடியின மக்‍கள், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோர், பல இடங்களில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும், கார்பரேட் நிறுவனங்கள், பல்கலைக்‍கழக கட்டமைப்புகள் ஆகியவற்றில் அவர்களுக்‍கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும் குறிப்பிட்டார். 

Night
Day