காங். ஆட்சிக்கு வந்தால் ஜூலை 1 முதல் உழைக்கும் பெண்கள் வங்கிக்கணக்கில் ரூ.8,500 - ராகுல்காந்தி உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வரும் ஜூலை 1 முதல் அனைத்து உழைக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் வங்கி கணக்கில் 8 ஆயிரத்து 500 ரூபாய் வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இது ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்றும் இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் எனக் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் ஆண்டிற்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்தநிலையில் அந்த 1 லட்ச ரூபாயை 12 பங்காக பிரித்து மாதம் 8 ஆயிரத்து 500 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Night
Day