காங். கட்சியின் மனுவை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மனுவை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 2018-2019ம் ஆண்டு காலகட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி 105 கோடி ரூபாய் வரி செலுத்த வருமானவரித்துறை  நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. வருமானவரித்துறை நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு  நீதிபதி யஸ்வந்த் வர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, வருமானவரித்துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸில் எந்த குறையும் இல்லை என்பதால், இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை எனகூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Night
Day