காதலிக்‍க மறுத்த இளம்பெண்ணுக்‍கு கொலை மிரட்டல் - பழ வியாபாரி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் காதலிக்‍க மறுத்த இளம்பெண்ணுக்‍கு கொலை மிரட்டல் விடுத்த பழ வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லாஸ்பேட்டை கருவடிகுப்பம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நிஷாவை, அப்பகுதியில் பழக்‍கடை வைத்திருந்த அருண் என்ற இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்ததுடன், தன்னை காதலிக்‍கும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அருண், தனது தாயார் சித்ரா மற்றும் தங்கை பரமேஸ்வரியுடன் நிஷா வீட்டிற்கு சென்று, தன்னைதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும், இல்லையென்றால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து நிஷா அளித்த புகாரின் பேரில், போலீசார் அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சித்ராவையும், பரமேஸ்வரியையும் தேடி வருகின்றனர். 

Night
Day