கார்கே காங். தலைவரான பிறகு கட்சி பதவிகள் தற்காலிகமாகி விட்டன: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து. தான் நீக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கார்கே காங்கிரஸ் தலைவரான பிறகு கட்சியில் உள்ள அனைத்து பதவிகளும் தற்காலிகமாகி விட்டதாக தெரிவித்துள்ளார். 

முன் அறிவிப்பு இன்றி நீக்‍கப்பட்டதை அறிந்த ஆதிர் ரஞ்சன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவராக பதவியேற்ற நாளில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளும் தற்காலிகமாகிவிட்டன. தனது பதவியும் தற்காலிகமாகிவிட்டது என்று தெரிவித்தார். முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் அராஜகம் நடப்பதாகவும் பொதுமக்களை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

Night
Day