கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கார் மோதி பெண்மணி உயிரிழந்த சம்பவத்தில், சிவசேனா தலைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பையின் வோர்லி பகுதியில் அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், நாக்வா என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் பிரதீப் நகாவா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சிவசேனா கட்சியின் தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிகிர் ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ராஜேஷ் ஷா உட்பட 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Night
Day