காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா அருகே கரையை கடந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே இன்று கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Night
Day