காவலர் நினைவிடத்தில் அமித்ஷா மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காவல்துறை நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படையினர் 10 பேர் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மலர்வளையம் வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். 

Night
Day