காவிரியில் இருந்து 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தவிர பல்வேறு நீர் விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Night
Day