காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா கட்சி தனித்துப் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக இந்தியா கூட்டணியில் இருந்த தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை, வரவிருக்கும் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி சொந்த பலத்தில் தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் இருவேறு கருத்துகள் கிடையாது எனவும் தெரிவித்தார்.  இந்தியா கூட்டணியிலிருந்து  திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது ஃபரூக் அப்துல்லாவும் அதே முடிவு எடுத்துள்ளதால் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

Night
Day