காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்- 6 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டம் அருகே தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கண்டம் தெரிவித்துள்ள ஜம்முகாஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என குறிப்பிட்டுள்ளார்.

Night
Day