காஷ்மீரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை முதலமைச்சர் உமர் அப்துல்லா தொடங்கி வைத்தார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியான காஷ்மீர் மாரத்தான் ஓட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை முதலமைச்சர் உமர் அப்துல்லா கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்தும் மேற்பட்ட தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். 21 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 42 கிலோ மீட்டர் தூரம் என இரு பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில், முதலமைச்சர் உமர் அப்துல்லா, பாலிவுட்  நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதை உலகிற்கு உணர்த்தும் வகையில் சுற்றுலா துறை சார்பில் இந்த மாராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Night
Day