காஷ்மீர் தாக்குதல் : ரூ.20 லட்சம் சன்மானம் அறிவித்தது காவல்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஷ்மீரில் பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியின் படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை, தீவிரவாதி பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது. காஷ்மீர் ரியாசி பகுதியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது கடந்த 10ம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் பலியாயினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்டையில் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதியின் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ள ரியாசி போலீசார், தீவிரவாதி பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 லட்ச ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளனர். தீவிரவாத தாக்குதல் தொடர்பான எந்த நம்பத்தகுந்த தகவல் கிடைத்தாலும் அதை தெரிவிக்குமாறு பொதுமக்களை ரியாசி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

Night
Day