கிருஷ்ணா ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 5 பேர் மீட்பு - 2 பேர் மாயம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் மாவட்டத்தில் டிராக்டர் ஒன்று கிருஷ்ணா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஷிரோல் தாலுகாவில் நடைபெற்ற இந்த விபத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 7 பேரில் 5 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். ஆனால் இரண்டு பேரை இன்னும் காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கிருஷ்ணா ஆற்றினை கடக்கும் போது ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Night
Day