குடியுரிமை திருத்த சட்டம் : அகில இந்திய முஸ்லிம் ஜமாத் வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் வரவேற்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களிடையே குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவரான மவுலானா ஷஹாபுதின் ரஸ்வி, இச்சட்டத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார். ஆஃப்கன், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளில் மத ரீதியாக கொடுமை அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மவுலானா ஷஹாபுதின் ரஸ்வி தெரிவித்துள்ளார்.

varient
Night
Day