குருகுல பாடசாலையில் தோப்புக்கரணம் போட்ட மாணவிகள் நடக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் அரசு குருகுல பாடசாலையில் தோப்புக்கரணம் போட்ட 50 மாணவிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம் ரொம்ப சோடவரம் நகரில் உள்ள அரசு கிரிஜன குருகுல பாடசாலையில் சுமார் 200 மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இதில், சரியாக படிக்காத சில மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியை 200 தோப்புக்கரணம் போட செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகளுக்கு கால் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு அவர்களால் நடக்க இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் ரொம்பசோடாவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Night
Day