குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் பேரானது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day