குவாட் உச்சி மாநாடு : அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

குவாட் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இதையடுத்து வரும் 23ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

Night
Day