குவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் தப்பி வந்த 3 தமிழர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத்தில் இருந்து மும்பை இந்தியா கேட் பகுதிக்கு படகு மூலம் தப்பி வந்த 3 தமிழர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை இந்தியா கேட் பகுதியில் உள்ள அரபிக்கடலில் மும்பை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த குவைத் படகை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குவைத்தில் உரிமையாளர் கொடுமைப்படுத்தியதால் அவரது படகிலேயே மும்பைக்கு தப்பி வந்ததும், அவர்கள் 3 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், படகு மூலம் போதை பொருட்கள் ஏதேனும் கடத்தி வந்தார்களா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day