குவைத் தீ விபத்து - 43 பேர் பலி, அனைவரும் இந்தியர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த அனைவரும் இந்தியர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான தெற்கு குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்குவதற்கான 7 அடுக்குமாடி கட்டடத்தில் தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் பெரும்பாலும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்தாக கூறப்படுகிறது.  அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தீவிபத்தில்  100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தீவிபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் 43 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள சமையலறையில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகினறனர். இது குறித்து குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீ விபத்து தொடர்பாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஊதிய உதவிகளை வழங்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், 965-65505246 என்ற உதவி எண்கள் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குவைத் தீ விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களிடம் குவைத் நாட்டிற்கான இந்திய தூதர் நலம் விசாரித்தார்.  கீழ் தளத்தில் செயல்படும் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தவர்கள்  40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள் என் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்,  தீ விபத்து நடந்த பகுதியில் இந்திய தூதர் ஆதர்ஸ் ஸ்வைகா நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தீவிபத்தில் சிக்கி காயமடைந்த 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள, அல்-அடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆதர்ஸ் ஸ்வைகா ஆறுதல் கூறினார்.
 

Night
Day