கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடுப் புகார் தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு புகார் குறித்த வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு  கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ளதால் சிறையிலிருந்து வெளியே வர இயலாத நிலை உள்ளது.

Night
Day