கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி சிபிஐ, அவரை கைது செய்ததால் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் விசாரணையை முடித்துள்ளன. 

Night
Day